2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் கொள்ளை

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

யாழ்.மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30 அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 2.00 மணியளவில்  வாகனமொன்றில் வந்த கொள்ளையர்கள் பாடசாலையில் காவலாளியை கட்டிவைத்துவிட்டு பாடசாலை உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் உள்ள 3 வீடுகளில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சுன்னாகம் சூராவத்தைப் பகுதியில் வீடொன்றினுள் திங்கட்கிழமை (03) அதிகாலை 1 மணிக்கு புகுந்து கொள்ளையிட முனைந்த
இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .