2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கார்த்மண்டு நேபால் பயிற்சி பட்டறைக்கு இலங்கையிலிருந்து இரு சிறுவர்கள் தெரிவு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

'கார்த்மண்டு நேபாள் பயிற்சி பட்டறைக்காக இலங்கையிலிருந்து இரு சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்' என யாழ்.மாவட்ட சிறுவர் உரிமைகள் பரிந்துரைத்தல் வலையமைப்பின் தலைவர் ஸ்ரீ.கஜேந்திரன் செவ்வாய்கிழமை (03) தெரிவித்தார். 

''சமாதானத்தை கட்டியெழுப்புவதிலும், அதற்கான படி நிலைகளில் சிறுவர்களினதும், இளையவர்களினதும் பங்களிப்பு'' என்ற தொணிபொருளில் கார்த்மண்டு நேபால் பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொள்வதற்கக சிறுவர் உரிமைகள் பரிந்துரைத்தல் வலையமைப்பினூடாக (ஊசுயுN) இலங்கையிலிருந்து இரண்டு சிறுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரராசா தயானி, காலி மாவட்டத்தைச் சேர்ந்த பயகல கோடேன் ஆகிய இருவரும் இப்பயிற்சி பட்டறைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி நேபாளம் செல்லவுள்ளனர்.

குறித்த சிறுவர்களுக்கு துணையாக ரஞ்சிதமலர் நந்தகுமார், நிராசா பெரகரா ஆகியோரும் உடன் செல்லவுள்ளனர்.  

இப்பயிற்சி பட்டறை எதிர்வரும் 9ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் இதற்கான அனுசரணையை சிறுவர் பாதுகாப்பு அமைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேற்படி பயிற்சிப்பட்டறையில் இந்தச் சிறுவர்கள் பங்குபற்றுவது யாழ்.மாவட்டத்திற்கும், யாழ்.மாவட்ட சிறுவர் உரிமைகள் பரிந்துரைத்தல் வலையமைப்பிற்கும் கிடைத்த வரலாற்று பதிவு என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .