2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மின் தாக்கி இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா

மின்சாரத் தாக்குதலுக்கு  உள்ளான  இருவர் படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் கே.நிறஞ்சன் (வயது 23) ஆர்.பாஸ்கரன் (வயது 47) ஆகிய இருவருமே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் விளம்பரப் பதாகையை பொருத்திக்கொண்டிருந்தபோது, அந்தப் பதாகை தவறி   மின்சாரக்கம்பி மீது வீழ்ந்துள்ளது. இதன்போது இந்தப் பதாகையை பொருத்திக்கொண்டிருந்த மேற்படி இருவரும் மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு மின் தாக்குதலுக்கு உள்ளான இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .