2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிய பளை பிரதேச வைத்தியசாலை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன், எஸ்.கிருஸ்ணன்


புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பளை பிரதேச வைத்தியசாலையின் மாடிக் கட்டிடத்தொகுதி நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீடம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணைச் செயற்றிட்டத்தின் கீழ், சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் இந்த மாடிக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு  மாடிகளைக் கொண்டதான இந்தக் கட்டிடத்தொகுதியில் வெளிநோயாளர் பிரிவு, பிரசவ விடுதி மற்றும் குழந்தைகள் வைத்திய விடுதி ஆகியவை  உள்ளன.

பளை பிரதேச வைத்தியசாலை யுத்தத்தினால் சேதமடைந்திருந்த நிலையில், இந்த வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்தொகுதிக்குரிய அடிக்கல் 2011ஆம் ஆண்டு நாட்டப்பட்டது.

இதற்கான நிகழ்வில் அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீடத்தின் பிரதிநிதி எம்.எஸ்செரி,  வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.சிவகருணாகரன்)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .