2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவு பிரசேத சபைத் தலைவர் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரேன்

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவருடைய வழக்கினை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொலை தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (3) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, றெஷிசனின்; மனைவி மற்றும் மகள் ஆகியோர் நீதிமன்றில் சாட்யமளித்தனர்.

தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். 

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் ஒருவர் கடந்த மாதம் 29ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .