2025 ஜூன் 25, புதன்கிழமை

'சத்துள்ள உணவும் அதன் தயாரிப்பும்' தொடர்பான பயிற்சிப் பட்டறை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 07 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா


யாழ். மாநகரசபையின் எல்லையினுள் உள்ள உணவு விடுதி, உணவுத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு 'சத்துள்ள உணவும் அதன் தயாரிப்பும்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை யாழ். பொதுநூலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுவருகின்றது. 

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டிலான இ;ந்த பயிற்சிப்பட்டறையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

உணவகங்களிலுள்ள குறைபாடுகள், உணவுச் சுகாதாரம் எவ்வாறு பேணுதல்; தொடர்பில் சுகாதார வைத்தியர் நித்தி கனகரட்ணம் விளக்கமளித்து வருகின்றார். 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ். மாநகர சபை எல்லையினுள் உள்ள  உணவகங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கு   சான்றிதழ்களை யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வழங்கிவருகிறார்.

யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், யாழ். பல்கலைக்கழக மருந்துவபீட பீடாதிபதி சந்திரசேகரப்பிள்ளை பாலகுமாரன், யாழ். மாவட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .