2025 ஜூன் 25, புதன்கிழமை

நெல்லியடியிலுள்ள வீடொன்றில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 10 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நெல்லியடி மாலுச்சந்திப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 102,500 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு  உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.மாவட்டகே தெரிவித்தார்.

ஆசிரியர்களாக பணியாற்றும் தானும் மனைவியும் பாடசாலையிலிருந்து திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கணினி, கமெரா, கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாட்டில் வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

கணேசரத்தினம் கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .