2025 ஜூன் 25, புதன்கிழமை

பெண்ணின் மார்பை வெட்டியவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கரவெட்டிப் பகுதியில் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, அதனை தடுத்த பெண்ணொருவரின் மார்பை வெட்டியதாகக் கூறப்படும் கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (வயது 33) என்பவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரட்ண மாவட்டகே தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி கரவெட்டிப் பகுதியிலுள்ள  வயலில் புற்களை வெட்டிக்கொண்டிருந்த இந்தப் பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் சேஷ்டை முற்பட்ட சந்தேக நபருக்கு இந்தப் பெண்  அடித்தார்.  இதனைத் தொடர்ந்து, இவரின் கையிலிருந்த கத்தியைப் பறித்து இடதுபக்க மார்பை வெட்டிவிட்டு சந்தேக நபர் தப்பிச்சென்றிருந்தார்.

இதில் படுகாயமடைந்த கரவெட்டியைச் சேர்ந்த 28 வயதான பெண்  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .