2025 ஜூன் 25, புதன்கிழமை

ஏசியா பவுண்டேசன் அதிகாரிகள் யாழ். மாநகரசபை நிகழ்வுகளில் பங்கேற்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 22 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட த ஏசிய பவுண்டேசன் அதிகாரிகள், யாழ். மாநகர சபையில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன்,  மாநகர சபையின் நிர்வாக ஒழுங்கமைப்புக்களையும் பார்வையிட்டனர்.

யாழ்.மாநகர சபையில் அமைக்கப்பட்ட திட்டமிடல் பிரிவு அலுவலகத்தினை த ஏசியா  பவுண்டேசன் நிறைவேற்று அதிகாரி மைக்கல் எச். ஆர்மகோர்ஸ் திறந்து வைத்தார்.

அத்துடன், காணி உறுதி பத்திரத்தினை ஆவணப்படுத்தல் பிரிவினை, த ஏசியா பவுண்டேசன் தலைவர் டேவிட் டி ஆர்னோல்ட் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, த ஏசியா பவுண்டேசன் அதிகாரிகளுக்கு யாழ் சின்னத்தினை நினைவுப்பரிசாக வழங்கியதுடன், பனைசார் கைப்பணி பொருட்களையும் அவர்கட்கு வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .