2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காணவில்லையெனக் கூறப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர் யாழ்.பொலிஸில் சரண்

Kogilavani   / 2014 ஜனவரி 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் கடந்த 24 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் கொட்டடியினைச் சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவரான மனோகரன் யதுசன் (17) என்பவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (27) சரணடைந்தததாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்டி இளைஞனும் ரவி பிரதீபன் (17) என்ற இளைஞனும் கடந்த 26 ஆம் திகதி தங்களின் பெற்றோர்களது பணத்தினை எடுத்துக்கொண்டு கொழும்பு சென்றதாகவும் அதில் ரவி கண்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றமையால் தான் யாழ்ப்பாணத்திற்கு பஸ் ஏறி வந்துள்ளதாக குறித்த இளைஞன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளான்.

 யாழ்.கொட்டடிப் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியினைப் பார்வையிடுவதற்காக சென்ற மனோகரன் யதுசன் (17) மற்றும் ரவி பிரதீபன் (17) ஆகியோர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .