2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாள்களுடன் இருந்த நால்வர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 08 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று (07) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச்சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆலய நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் மடத்தில் இருந்ததாகவும், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கும் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .