2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

புகையிரதக் கடவை விதிமுறையை மீறியவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கனகபுரம் புகையிரதக் கடவையில் புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்ட தருணம் மோட்டார் சைக்கிளை கடவையினூடாகச் செலுத்திச் சென்ற நபருக்கு 1500 ரூபா தண்டப் பணம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.வாகாப்தீன் புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பொலிஸாரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட கனகபுரம் பகுதியினைச் சேர்ந்த மேற்படி நபர் புதன்கிழமை (12) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X