2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இளைஞன் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்குதல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.செம்மணியினைச் சேர்ந்த கே.சபேசன் (20) என்ற இளைஞன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் புதன்கிழமை (19) இரவு 9 மணியளவில்; மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் வியாழக்கிழமை (20) தெரிவித்தனர்.

மேற்படி இளைஞன் வீதியில் சென்றுகொண்டிருக்கும் போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், தன்னைத் தாக்கியவர்கள் யார் என தனக்கு தெரியாது எனவும் அந்த இளைஞன் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .