2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் இரண்டாம் தடவையாக நீக்கம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இரண்டாம் தடவையாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் வியாழக்கிழமை (20) தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வலி.வடக்கு மக்களை மீள்குடியமர்த்துமாறும், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் கோரி நேற்று (19) கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அப்பகுதியிலிருந்த பொலிஸார் புதன்கிழமை (19) கைதுசெய்தனர்.

தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.எம்.கே.தமயந்த விஜயசிறி பணிப்புரை விடுத்தார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றிலுள்ள பத்திரிகைகளை எரிக்கச்சென்றார் என்ற குற்றச்சாட்டில்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யுமாறு குறித்த காலப்பகுதியில் கடமைபுரிந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எட்வேட் மகேந்திர பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .