2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணை

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

தன்னை சிலர் ஏமாற்றி 83 இலட்சம் ரூபா வரையிலும் மோசடி செய்துள்ளதாக கூறி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள தனது மதுபானசாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்த ஆசிரியரினை வியாழக்கிழமை (20) மாலை கைதுசெய்ததுடன் விசாரணைகளின் பின்னர்  விடுவித்ததாக நெல்லியடிப் பொலிஸார் இன்று (21) தெரிவித்தனர்.

மேற்படி ஆசிரியர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் அவரது வீட்டுக்காரர்களுக்கு தெரியாமையினால் அவரைக் காணவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த நபர் விசாரணை செய்யப்படுவதை மனித உரிமைகள் அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர் 'என்னை உண்ணாவிரதம் இருக்கவிடாமல் தடுக்கின்றீர்கள். இவ்வாறு நீங்கள் தடுத்தால் தற்கொலை செய்வேன்' என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியர் நேற்று (20) இரவு விடுவிக்கப்பட்டதுடன், அவர் இன்று (21) பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .