2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'புகை எமது வாழ்க்கைக்கு பகை'

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 21 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


'புகை எமது வாழ்க்கைக்கு பகை' என்ற தொனிப்பொருளில் பல்வேறு சுலோகங்களையும் தாங்கியவாறு ஊர்வலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (21) தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இருந்து ஆரம்பமாகி சுன்னாகம் வரை சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் க.கேதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

சுகாதார அமைச்சின் 101 நாள் வேலைத்திட்டதின் கீழ் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவு, உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவு, தெல்லிப்பளை உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகள், வலி. தெற்கு, வலி.வடக்கு பிரதேச சபைகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் சுகாதார வைத்தியதிகாரிகளான அ.ஜெயக்குமாரன், எஸ்.நந்தகுமார் ஆகியோரும் வடமாகாண சபையின் சுகாதார அமைச்சரின் பிரதிநிதி, வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ; வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், சுகாதார பரிசோதகர்கள், மருந்துவ மாதுக்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .