2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கசிப்பு வைத்திருந்த மூவருக்குத் தண்டம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கசிப்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தலா 15000 ரூபா தண்டம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பஷPர் மொஹமட் நேற்று (21) உத்தரவிட்டார்.

யாழ். புத்தூர் கிழக்கு கலைமதி பகுதிலுள்ள வீடொன்றில் வைத்து கசிப்பு விற்பனை செய்துகொண்டிருந்த இருவரை கடந்த சனிக்கிழமையும் (15), யாழ்.வசாவிளான் சுதத்திரப் பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனை செய்த ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (16) அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் அன்றைய தினங்களே விடுவிக்கப்பட்டு தொடர்ந்து நேற்று (21) மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .