2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞன் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், ஐ.நேசமணி

யாழ்ப்பாணம் அளவெட்டி பத்துப்பனையடியினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியினை அதேயிடத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று நண்பகல் பாலியல் பலாக்காரம் செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து, குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக  தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுமி வேறுசில சிறுமிகளுடன் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஆலயமொன்றில் நீர் அருந்தச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு சிறுமியும் நீர் அருந்திவிட்டுச் செல்கையில் இறுதியாக இந்தச் சிறுமி நீர் அருந்திக்கொண்டிருந்த நேரம் அவ்விடத்திற்கு வந்த மேற்படி இளைஞன் சிறுமியின் வாயினைப் பொத்தி வீடொன்றிற்குள் தூக்கிச் சென்று இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி அழுதுகொண்டு வந்தவேலை வீதியில் சென்றவர்கள் விசாரித்து நடந்து விடயத்தினை அறிந்து சிறுமியின் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பெற்றோர்கள் உடனடியாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
அத்துடன் குறித்த சிறுமியினை வைத்திய பரிசோதனைகளுக்கான தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .