2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

காணி உரிமை மீட்புக்கான அமைப்பு உருவாக்கம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


முல்லைத்தீவு மாவட்டத்தில் 'காணி உரிமை மீட்புக்கான அமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினரும் அவ்வமைப்பின் செயலாளருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு 4ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடி, தத்தம் பிரதேச வாழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பிலும், அரசு மற்றும் அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனிநபர் பொதுத்தேவை காணிகள் தொடர்பிலும் கலந்தாலோசித்த பின்னர் குறித்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் வழி நடத்தல் செயலராக வைத்திய கலாநிதி சி.சிவமோகனும், வழி நடத்தல் ஆலோசகர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள் கனகசுந்தர சுவாமி, திருமதி மேரி கமலா குணசீலன் ஆகியோரும், கிராம மட்ட செயல்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

நீண்ட காலமாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்த காணிகளில், இராணுவம் பலாத்காரமாக குடியிருக்கும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளல், நீண்ட காலமாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்தும், அவர்களுக்கான காணி உரித்து பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாதிருப்பதை கண்டிப்பதோடு, அவர்களுக்குரிய காணி உரித்து பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல், பிரதேச சபைகள், பாடசாலைகள், சனசமுக நிலையங்கள் என்பவற்றுக்குரிய காணிகள், கட்டிடங்களில் குடியிருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றி அவற்றை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் இந்த அமைப்பின் தீர்மானங்களாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .