2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிவராத்திரியை முன்னிட்டு 'சிவ வாரம்' பிரகடனம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

சிவராத்திரியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் சிவ வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சிவத்தமிழ் மானிட விடியற்கழகம், சிவத்தொண்டர் சிவமங்கையர் அமைப்புகள், சைவநெறிக் கூடம் ஆகியன இணைந்தே இந்த சிவ வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் பாடசாலைகளில் சிவதொண்டர், சிவமங்கையர் அமைப்புகளை உருவாக்குதல், தமிழ் வழிபாட்டுப் பிரசாரம், பிடியரிசித் திட்டம், மது, புகைத்தல் விலக்குப் பிரச்சாரம், சிரமதானப் பணிகள், அறநெறிப் பாடசாலைகள் உருவாக்கல், கூட்டுப் பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்தல், சிவமங்கையரின் கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி முன்னெடுப்புகள் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று, சிவதொண்டர்களால் சம்புநாத ஈஸ்வரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிவபெருமானின் 21 அடி திருச்சொரூபத்திற்கு முன்பாகப் பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவ்வமைப்பினர் தெரிவித்தனர். 

குறிப்பாக, சிவத்தமிழ் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும், முற்றுமுழுதாக தமிழ் வழிபாடுகளும், சம்புநாத ஈஸ்வரத் தீர்த்தக் கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆதிமூலலிங்கநாதருக்கு அடியார்கள் கடல் தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தலும் தமிழ்த் திருமறை வழிபாடும் நடைபெறவுள்ளன. 

கடந்த சில வருடங்களாக சிவத்தமிழ் மானிட விடியற்கழகத்தால் சிவராத்திரியை ஒட்டிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி அறப்பணிச் செயற்பாடுகள் இம்முறை சிவ நற்பணி மன்றங்களுடன் இணைந்த நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .