2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீபழனி கூட்டுறவுச் சங்கத்தினால் சுழற்சி முறையில் கடன் வழங்கல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஐயவாசகன்


யாழ். சாவகச்சேரி ஸ்ரீபழனி கூட்டுறவுச் சங்கத்தால் இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்ட 5 அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறையில் குறைந்த வட்டியுடனான கடன்; வழங்கப்பட்டதாக அச்சங்கத் தலைவர் ஸ்ரீகாந்தரூபி பரமநாதன்  தெரிவித்தார்.

அத்துடன், அங்கத்தவர்களின் 4 பிள்ளைகளுக்கு தலா 1,500 ரூபா படி  உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அச்சங்கத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள அகிலாண்டம் சனசமூக மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. இதன்போதே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அங்கத்தவர்கள் சங்கத்திலிருக்கும் அங்கத்துவக் காலத்தின் அடிப்படையில் வருடா வருடம் சுழற்சி முறையில் 5 பேருக்கு 50,000 ரூபா தொடக்கம் 100,000 வரை குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்பட்டு வருகின்றன.

1997ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இச்சங்கத்தில் தற்போது 20 பேர் அங்கத்தவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .