2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மூன்று சிறார்கள் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு பிணை

Kogilavani   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.குருநகர் பகுதியினைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவனையும், 15 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கண்டியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையை 2 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர் பிணையில் செல்ல, யாழ்.சிறுவர் நீதிமன்ற நீதவான் எஸ்.ஜீவராணி திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்தார்.

கண்டியினைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கே இவ்வாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த நபர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் வந்து கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி நபர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுவர்களுக்கு பாலியல் புகைப்படங்கள் காண்பித்துள்ளதுடன் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியுள்ளார். பொலிஸாரினார் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் யாழ்.சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளையில், நீதிபதி அந்நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

மேற்படி நபர் திங்கட்கிழமை (24) மீண்டும் யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே  நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .