2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் மாணவன் படுகாயம்

Super User   / 2014 மார்ச் 05 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு முன்பாக வீதியினைக் கடக்க முற்பட்ட மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (05) மதியம் 2 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் டிறிபேக் கல்லூரியில் தரம் 4 இல் கல்விகற்கும் சசிதரன் கௌசிகன் (09) என்ற மாணவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் கூறினார்கள்.

குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியினைக் கைது செய்ததுடன், மோட்டார் சைக்கிளினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .