2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டார் தம்பிராசா

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். வலி. வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி கடந்த 21ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசா, 21 நாட்களின் பின்னர் தனது போராட்டத்தினை இன்றுடன் (13) கைவிட்டுள்ளார்.

மேற்படி விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற மாபெரும் போராட்டங்களினாலேயே தான் இந்தப் போராட்டத்தினைக் கைவிடுவதாக தம்பிராசா தெரிவித்தார்.

தம்பிராசா சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்த போது, கடந்த புதன்கிழமை (05) அவரது சத்தியாக்கிரக கொட்டகை காணாமற்போயிருந்தது. இது தொடர்பாக தம்பிராசா யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .