2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய வியாபாரிகள் எண்மர் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 14 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட 8 பேரை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகளையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி 8 பேரும் யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .