2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிராம அபிவிருத்திற்கு ஒத்துழைக்கவேண்டும்: டக்ளஸ்

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


அரசாங்கத்தினால் கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிகளினை கிராமஅலுவலர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழில் புதிதாக நியமனம் பெற்ற கிராம அலுவலர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'அரச கொள்கைகளுக்கு ஏற்ப கிராம அலுவலர்கள் தங்கள் பணிகளைத் தொடரவேண்டும். கிராம அலுவலர்கள் கிராம அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தி அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் புதிதாக நியமனம் பெற்ற 129 கிராம அலுவலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .