2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோண்டாவிலில் பதற்றம்

Kanagaraj   / 2014 மார்ச் 14 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இராணுவத்தின் நோய்காவு வண்டி( அம்புலன்ஸ்) துவிச்சக்கரவண்டிகள் மூன்றுடனும் எதிரேவந்த மோட்டார் சைக்கிளுடனும்  மோதிவிபத்துக்குள்ளானது.

சம்வத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் அதிலொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அவ்விடத்தில் குழுமிய இளைஞர்கள் சிலர் நோய்காவு வண்டியிலிருந்த இராணுவத்தினரை தாக்கமுட்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த இராணுவத்தினர் அங்கு குழுமியிருந்த இளைஞர்களில் சிலரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இராணுவ முகாமிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு படைத்தரப்பைச்சேர்ந்த நோயாளியை  ஏற்றிவந்த இராணுவத்திற்கு சொந்தமான நோய்காவு வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Friday, 14 March 2014 03:59 PM

    உதவிக்கு வந்தவனே உபத்திரவத்தில்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .