2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்லுக்கு வெடிவைத்தவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

யாழ்.சிறுபிட்டி தெற்குப் பகுதியில் தனது வீட்டு வளவுக்குள் இருந்த கற்களுக்கு வெடிவைத்துத் தகர்க்க முற்பட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த கிட்டினன் பரராஜசிங்கம் (48) என்பவர் வெடி வெடித்ததில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (14) அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டு வளவுக்குள் இருந்த பாரிய கற்களை உடைக்கும் நோக்குடன் வெடி வைத்துவிட்டு நீண்டநேரமாகியும் அது வெடிக்காததனால் கற்களை விலக்கி பார்க்க முற்பட்ட வேளையில் வெடி வெடித்ததில் மேற்படி நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .