2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இரண்டு நியதிச் சட்டங்கள் முதலமைச்சரினால் முன்வைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 18 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண சபையின் நியதிச் சட்டங்களில் புதிதாக நிதிநியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் என்பன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (18) சபையில் முன்வைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.

இதன்போதே முதலமைச்சர் மேற்படி இரண்டு நியதிச் சட்டங்களையும் சபையில் முன்வைத்தார். அத்துடன் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்காத நிலையில் குறித்த நியதிச் சட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்தார்.

அத்துடன், முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், அது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இன்று (18) முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் இரண்டு அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படும் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .