2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புன்னாலைக்கட்டுவான் கத்திக் குத்து; தலைமறைவாகியிருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். புன்னாலைக்கட்டுவான் தெற்கு மத்தாளோடைப் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்துடன் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை (18) மாலை கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள வாழைத் தோட்டமொன்றில் மாடு புகுந்தமையால்,  இரு குடும்பங்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால்  இராசேந்திரன் செல்வரஞ்சன் (வயது 45) என்பவர் கத்திக் குத்துக்குள்ளானார்.

இதில் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில்  விசாரணை மேற்கொண்டுவந்த  நிலையில், தலைமறைவாகியிருந்த இச்சந்தேக நபரை புன்னாலைக்கட்டுவான் பகுதியில்  கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (19)  ஆஜர்படுத்தவுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .