2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆபாசப்பட இறுவட்டுக்கள் விற்பனை செய்த இருவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 19 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நகரப்பகுதியில் ஆபாசப்பட இறுவட்டுக்களை விற்பனை செய்த இருவருக்கு தலா 5000 ரூபா தண்டம் விதித்து யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.
 
ஆபாச பட இறுவட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலினையடுத்து, யாழ். நாவலர் வீதி மற்றும் கன்னாதிட்டி சந்தி ஆகியவற்றில் அமைந்துள்ள இரு இறுவட்டு விற்பனை நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) சோதனை செய்யப்பட்டன. 

இதன்போது விற்பனை நிலையத்திலிருந்த 20 ஆபாசப் பட இறுவட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்படி நபர்கள் இருவரையும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (18) ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் குறித்த நபர்களுக்கு தலா 5000 ரூபா தண்டமும், 6 மாதங்களுக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .