2025 ஜூன் 28, சனிக்கிழமை

கடமையின் போது உயிர்நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கடமையின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) இடம்பெறவுள்ளதாக யாழ். தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.

யாழ். பொதுநூலகத்தின் முன்பாக வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .