2025 ஜூன் 28, சனிக்கிழமை

விசர்நாய்த் தடுப்பூசி

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் பிரதேச கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினால், உடுவில் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாக உடுவில் பிரதேச கால்நடை திணைக்களத்தின் வைத்தியஅதிகாரி எஸ்.விமலகுமார் இன்று (23) தெரிவித்தார்.

வெப்பகாலம் ஆரம்பமாகியுள்ளமையினால் நாய்களுக்கு 'நீர்வெறுப்பு' நோய் பரவக்கூடிய சூழ்நிலை அதிகமாகக் காணப்படுகின்றமையினால் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை உடுவில் பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படுவதினால் தடுப்பூசி நடவடிக்கை துரித கதியில் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், நாய்களை வீடுகளில் வளர்பவர்களும், ஏனையவர்களும் நாய்களுக்கான தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் விசர் நாய்க்கடிக்கு உள்ளாகும் அபாயத்தை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .