2025 ஜூன் 28, சனிக்கிழமை

வைத்தியசாலைக்கு கண்வில்லைகள் வழங்கிவைப்பு

Super User   / 2014 மார்ச் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்
சர்வதேச லயன்ஸ் கழக (306 வி 1) மாவட்ட ஆளுநர் றஞ்சித் பெர்ணான்டோவினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 30 கண்வில்லைகள் இன்று (23) வழங்கப்பட்டன.

மேற்படி கண்வில்லைகள் சாவகச்சேரி வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினையடுத்தே வழங்கப்பட்டன.

தொடர்ந்து, போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக சாவகச்சேரி வைத்திய குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட 'குருந்தம்' புனர்வாழ்வு மையத்தினையும் றஞ்சித் பெர்ணான்டோ, மற்றும் அவரது பாரியார் றஞ்சித் பெர்ணான்டோ டில்கானி ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன்போது குருந்தம் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இந்நிகழ்வுகளில், வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் த.குகதாசன், சாவகச்சேரி பிரதேச லயன்ஸ் கழக உறுப்பினர்களும், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0

  • thas Sunday, 23 March 2014 02:47 PM

    குட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .