2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுமி விழுந்து படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குப்பிளான் தெற்கைச் சேர்ந்த திலீபன் கிரிசாயினி (வயது 04) என்ற சிறுமி  தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில்,  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (25) அனுமதிக்கப்பட்டதாக தெல்லிப்பழை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தையின் தாய் மற்றுமொரு சிறு பிள்ளையைத்; தூக்குவதற்காக தனது கையிலிருந்த மூத்த பிள்ளையை மதிலில் இருத்த முற்பட்டபோது,  மூத்த பிள்ளை தவறி  விழுந்து படுகாயமடைந்ததாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஏழாலை வடக்கில் 04 மாத குழந்தையின்  அழுகையை நிறுத்துவதற்காக அக்குழந்தையின்;  03 வயது அண்ணன் மண்ணெண்ணையை பருக்கியதாகவும் இதனால், பாதிக்கப்பட்ட குழந்தை  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது குணமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்குழந்தையின் தாய்; கிணற்றடிக்குச் செல்வதற்காக  குழந்தையை அக்குழந்தையின் 03 வயது  அண்ணனின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். 
இந்நிலையில் தனது தங்கை அழுவதைக் கண்ட அண்ணன், தங்கை நீருக்காக அழுகிறாள் என நினைத்து அருகில் இருந்த மண்ணெண்ணெயை நீரென்று நினைத்து பருக்கியுள்ளார்.

தங்கையும் மண்ணெண்ணையை  குடிக்க ஆரம்பித்த வேளை  அவ்விடத்திற்கு வந்த தாய்,  போத்தலுடன் மண்ணெண்யை  பறித்துவிட்டு உடனடியாக குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .