2025 ஜூன் 28, சனிக்கிழமை

நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சரசாலை தெற்கில் அமைந்துள்ள வீடொன்றில் 1,57,000 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை (25) அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் புதன்கிழமை (26) தெரிவித்தனர்.

கடந்த 20 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்தவர்கள் குறித்த வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணம் திருடியுள்ளதாக ஸ்ரீஜெயசந்திரன் சிவகாமசுந்தரியினால் கடந்த 20 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், இரு தோடுகள், மோதிரம், சங்கிலி மற்றும் 20,000 பணம் உள்ளிட்ட 1,57,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்று செவ்வாய்க்கிழம(25) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .