2025 ஜூன் 28, சனிக்கிழமை

மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் யாழ்.வருகை

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா


இலங்கை முழுவதும் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டு வருகின்ற மலேசியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 9 பேர் வியாழக்கிழமை (27) பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை வந்தடைந்தனர்.

யாழ்.பாதுகாப்புப் படைத்தலைமையகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் 52 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சூலனி அபயநாயக்க மோட்டார் சைக்கிள்      ஓட்டுனர்களை வரவேற்றார்.

1200 சிசி மற்றும் 1600 சிசி வலு கொண்ட டி-6 ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் இவர்கள் வியாழக்கிழமை (27) காலை 9 மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்பட்டு புல்மோட்டை அரச மரத்தடி சந்தி, வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .