2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டவர், நீதிமன்றத்தினால் விடுதலை

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஓட்டுமடம் பகுதியில் வைத்து கடந்த 25ஆம் திகதி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி தர்மபுரம் பகுதியினைச் சேர்ந்த மோகன் கேதீஸ் (35) என்ற நபரை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று (28) விடுதலை செய்தார்.

குறித்த நபரை இன்று (28) நீதிமன்றத்தில் ரி.ஐ.டியினர் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

குறித்த நபர், ஓட்டுமடத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்த வேளை, ஆள் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினாலேயே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ரி.ஐ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .