2025 ஜூன் 28, சனிக்கிழமை

கைப்பணித்துறையை வளர்த்தெடுப்போம்: டக்ளஸ்

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


'கலை,கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக கைப்பணித்துறையை வளர்தெடுத்து மேம்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்'  என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற தேசிய கைப்பணி, கைத்தொழில் போட்டிக்கான புதிய ஆக்கங்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'எமது கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுக்கும் வகையில் நாம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ள நிலையில், இதுபோன்ற செயலமர்வுகளும் எமக்கு உறுதுணையாகவும் அமைகின்றது.

உங்களுடைய அனுபவங்களையும் நவீன முறையிலான நெறிப்படுத்தல்களையும் கருத்தில் கொண்டு தொழிற்துறைகளை மேம்படுத்தும் வகையில் இந்த செயலமர்வை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளை, வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு உங்களது அனுபவங்களையும் இச்செயலமர்வின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டு சில கண்காட்சியில் இம்மாவட்டம் சார்பில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும். இதற்கான வழிவகைகளை எமது அமைச்சின் தேசிய அருங்கலைகள் பேரவை ஊடாக முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம்'  என அவர் மேலும் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படும் மேற்படி செயலமர்வுகள் மன்னார், கிளிநொச்சி,வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .