2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐ.நேசமணி

பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்னர் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(6) தெரிவித்தனர். 

கோயில் மடப்பள்ளியில் இருந்த 60 செப்புச் செம்புகள், 2 குத்துவிளக்கு, 2 குடம், மற்றும் பஞ்சாராத்தி உள்ளிட்ட தீபம் காட்டுவதற்கான விளக்குகள் ஆகியன திருடப்பட்டுள்ளதாகவும் சுவாமி தூக்குவதற்கு பயன்படுத்தும் குதிரை, மற்றும் யானை வாகனங்களின் தலைகள் கொய்யப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை(4) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .