2025 ஜூன் 28, சனிக்கிழமை

சங்கானை பிரதேச சபையின் நீர் தின நிகழ்வு

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி.மேற்கு (சங்கானை) பிரதேச சபையினால் சர்வதேச நீர் தின நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை(8) காலை 9 மணி முதல் 4.30 மணி வரையும் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வலி.மேற்கு வேள்ட் விசன் முகாமையாளர் ஐ.மைக்கல், தென்மராட்சி வேள்ட் விசன் முகாமையாளர் கி.றொசாரியர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் 'நீரினால் பரவக்கூடிய நோய்களும் அதற்கான தடுப்பு முறைகளும்'; என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறைத் தலைவர் வைத்திய கலாநிதி  இ.சுரேந்திரகுமார் உறையாற்றவுள்ளார்.

'சமூக சொத்து நீர்' எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணாவும், 'நீர் தொடர்பான பிரச்சினையும,  நீர் முகாமைத்துவமும்' என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வி.பிரதீபாவும், 'சுத்தமான நீர்' என்னும் தொனிப்பொருளில் சங்கானைப் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் தலைமை பொதுசுகாதார பரிசோதகர் ப.சோழனும், 'வரட்சியும் தணிப்பும்' என்ற தொனிப்பொருளில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் த.பிரதீபராசாவும் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில், செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா பொதுச்சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக மார்ச் 22 உலக நீர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
அரிதாக கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .