2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக சுகத் ஏக்கநாயக்க

Super User   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஈ.எம்.சுகத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் யாழ்ப்பாண யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த சமன் சிகேரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு பெற்றதினையடுத்து அவ்விடத்திற்கு ஏக்கநாயக்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏக்கநாயக்க 1987 ஆம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியிருந்ததுடன், தொடர்ந்து கொழும்பு அனுராதபுரம், கேகாலை, பொல்காவளை, ரிதிகம, மீரிகம ஆகிய இடங்களில் கடமையாற்றி வந்துள்ளார்.

அத்துடன். இறுதியாக கடந்த 7 வருடங்களாக தம்புள்ள தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

இவர் தனது கடமைகளை கடந்த திங்கட்கிழமை (07) முதல் பொறுப்பேற்றுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .