2025 ஜூன் 28, சனிக்கிழமை

இராணுவத்தினரை முழுமையாக நம்புகின்றோம்: சுந்தராஜன்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  நா.நவரத்தினராசா 

நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் நம்பவில்லை மாறாக இராணுவத்தினரையே முழுமையாக நம்புகின்றோம் எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இராணுவத்தினர் செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேராவிடம் மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையப் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.சுந்தரராஜன் திங்கட்கிழமை (14) கோரிக்கை விடுத்துள்ளார்.
513 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மல்லாகம் கோணப்புலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாஸ்கரன் விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் திங்கட்கிழமை (14) இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த உதயபெரேராவிடமே சுந்தரராஜன் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

'இடம் பெயர்ந்த காலம் முதல் நாம் நல்ல உணவை உண்டது இல்லை. எமது முகாமில் பசியும் பட்டினியும் காணப்படுகின்றது. எங்களுக்கு நிவாரணம் வழங்க படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகள் கூட உரிய முறையில் உண்ண முடியாத நிலைமை காணப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

இதற்கு கட்டளைத் தளபதி பதிலளிக்கையில்,

'பிள்ளைகளுக்கு உணவு இல்லையென்றால் நாங்கள் அதற்கு உரிய முறையில் உதவி செய்ய முடியும். அத்துடன், இது தொடர்பாக நலன்புரி நிலையத்திற்கு அருகாமையிலுள்ள இராணுவ முகாம் பொறுப்பாளருடன் தொடர்பு கொண்டு எங்களுக்கு அறியத்தருகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .