2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாமியின் மறைவை தாங்கமுடியாத மருமகள் மரணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

மாமியாரின் மறைவை தாங்க முடியாத மருமகள், மாமியாரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற வேளை மயங்கி வீழ்ந்து மரணமான சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் அல்லாரையில் இன்று(15) இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

திருமதி சிவராஜா இராசம்மா (57) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இராசம்மாவின் கணவன் 2000 ஆம் ஆண்டு கொடிகாமம் பகுதியில் எறிகணை வீச்சில் மரணமடைந்ததை தொடர்ந்து, இராசம்மாவினையும் அவரது பிள்ளைகளையும் இராசம்மாவின் கணவரின் தாயார் (மாமி) பராமரித்து வந்துள்ளார்.

இராசம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டிற்குச் சென்றமையினால் இராசம்மா வவுனியாவில் வாழ்ந்து வந்ததுடன், மாமியார் கொடிகாமத்தில் வசித்த நிலையில் நேற்று(14) இயற்கை மரணம் எய்தியுள்ளார்.

இதனையடுத்து மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று(15) வவுனியாவிலிருந்து வந்த இராசம்மா இறுதிக் கிரியைகளின் போது திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.

உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், இடைநடுவே அவரது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சடலம் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .