2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி சுகாதார ஊழியர்களுக்கும்  வேலைப்பகுதி தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகரசபை தெரிவித்திருந்தது.
இருப்பினும்,  இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ். மாநகரசபையில் 420 இற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களும்  வேலைப்பகுதி தொழிலாளர்களும் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 180 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர்.

கல்விப் பொது சாதாரண தரத்தில் 6 பாடங்களுக்கான  சித்தியுடன் சுகாதார ஊழியர்களாக தாங்கள்  கடமையாற்றி வருவதாகவும்  தற்போது இதற்கான கல்வித் தகைமையை உயர்த்தியுள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பாக 100 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் கூறியிருந்தார். இருப்பினும், இதுவரையில் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இன்றையதினம்  (16) மாலைக்குள் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாவிடின்  தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .