2025 ஜூன் 28, சனிக்கிழமை

தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள ஆலோசனை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையில் நிலவுகின்ற வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக, வடமாகாணத்திலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதாக இராணுவ உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பாரிய வெற்றிடம் நிலவுவதாகவும், அந்த வெற்றிடம் பெரும்பாலும் வடக்கினை சார்ந்திருப்பதினாலுமே வடமாகாண தமிழ் இளைஞர், யுவதிகளை படையில் சேர்ப்பதற்கு ஆலோசித்து வருவதாக படைத்தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிவில் பாதுகாப்பு படையில் வடமாகாண இளைஞர்களை சேருமாறு விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், தமது பரிசீலனைகள் நிறைவடைந்ததும் உத்தியோகபூர்வமாகவே விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் இராணுவ தகவல் மேலும் தெரிவிக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .