2025 ஜூன் 28, சனிக்கிழமை

துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் நேற்று (16) இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மேற்படி இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .