2025 ஜூன் 28, சனிக்கிழமை

வானைக் காணவில்லையென முறைப்பாடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.அத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் பூட்டப்பட்டு விடப்பட்ட ஹயஸ் ரக வான் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (15) களவாடப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை (17) உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிறுகுற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று (18) தெரிவித்தனர்.

யாழ்.ஆரியகுளம் பகுதியினைச் சேர்ந்த குணசேகரம் காந்தரூபன் என்பவரது வானே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.
மேற்படி நபர் தனது வானினை வெளியில் நிறுத்திவிட்டு ஆலயத்திற்குச் சென்று திரும்புகையில் அது களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வான் அருகே இரண்டு பேர் நின்றிருந்ததாகவும், அவர்களை அடையாளங் காட்ட முடியும் என ஆலயத்தின் முன்னால் கச்சான் வியாபாரம் செய்துகொண்டிருந்த பெண் தெரிவித்ததாக உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .