2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாதிரியார் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளோம்: பொலிஸ்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுமித்தி தங்கராசா

யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்னாலுள்ள கிணற்றில் இருந்து 14 ஆம் திகதி  திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர்களினால் கூறப்படும் இரு பாதிரியார்களையும் யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கென்சலிற்றாவின் மரணத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்படும், இரு பாதிரியார்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கு ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 

கொன்சலிற்றாவின் தொலைபேசிக்கு இரு பாதிரியார்களின் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து ஏற்படுத்திய அழைப்புக்களின் விபரங்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவின் பேரில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

அந்த அழைப்புக்களின் விபரங்களுடனும், சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பிரகாரமும், மே மாதம் 12 ஆம் திகதி இரு பாதிரியார்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், நீதிமன்றின் உத்தரவில் நீதிவான் விசாரணையும் இடம்பெற்று வருகின்றதாகவும் யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • S.P.Jesuthasan Sunday, 27 April 2014 01:39 AM

    கொன்சலிற்றாவின் தொலைபேசிக்கு இரு பாதிரியார்களின் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து ஏற்படுத்திய அழைப்புக்களின் விபரங்களை அறியத்தர இத்தனை நாட்களா? ஆச்சரியம்! துரும்பைத் தூணாக்கும் முயற்சியா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .