2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

யாழ். கொடிகாமத்தின் பாலாவி வடக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்துகொண்டு தப்பியோடியவரின் உழவு இயந்திரச் சில்லுக்கு பொலிஸார்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், சந்தேகத்தின்  அடிப்படையில்  உழவு இயந்திரச் சாரதியான பொன்னையா நிமலன் (வயது 22) என்பவரை கைதுசெய்ததாகவும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து அங்கு  சனிக்கிழமை (26) மாலை   சென்றபோது, தங்களைக் கண்டு உழவு இயந்திரத்துடன் சந்தேக நபர் தப்பியோடினார்.

இந்நிலையில், குறித்த உழவு இயந்திரத்துடன்  தப்பியோடியவரை   பொலிஸார்; துரத்திச் சென்றனர். இதன்போது, அங்கு நின்றிருந்த சிலர் ஆணிகள் பொருத்திய பலகைகளை வீதியில் வைத்து பொலிஸாரின் வாகனத்தின் ரயர்கள் காற்றுப் போகச் செய்ததுடன், குறித்த உழவு இயந்திரத்துடன் சந்தேக  நபர்; தப்பியோடுவதற்கும் வழியமைத்தனர்.

இருப்பினும்,  வாகனத்திலிருந்து கீழிறங்கிய பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தின் சில்லுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு, சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி கொடிகாமம், கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்துகொண்டு தப்பியோடிய இச்சந்தேக  நபரின் உழவு இயந்திரச் சில்லுக்கு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு சந்தேக நபரை கைதுசெய்திருந்தனர். இந்நிலையில், சாவகச்சேரி நீதிமன்றத்தினால்  இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .